கலாநிதி ஜெகான் பெரேரா
நீர்ச்சறுக்கல் விளையாட்டில் ஈடுபடுபவர்கள் கடல் அலைகளைக் கையாளும் ஆற்றல் கொண்டவர்களாக இருக்கவேண்டும்.அலை எந்தளவுக்கு பெரியதாக இருக்கிறதோ அந்தளவுக்கு அவர்கள் உயரத்துக்கு செல்வார்கள். அலையில் இருந்து தப்பிக்க முயற்சிப்பவர்கள் அதன் கீழே மூழ்கிவிடுவார்கள். எதிரணி அரசியல் கட்சிகளினால் உருவாக்கப்படுகின்ற உள்ளூராட்சி தேர்தல்களுக்கான கோரிக்கை அலையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையாளுவார் என்றே தோன்றியது.சட்டப்படி இந்த தேர்தல்கள் எதிர்வரும் மார்ச் மாதமளவில் நடத்தப்படவேண்டியவையாக இருக்கின்றன.